Tuesday, February 1, 2011

ƒÉ¢òÐ À¢¡¢ó¾ µ÷ ¯È×

பேசும் படம் புத்தகத்தில்
நடிகை ஸ்ரீவித்யா
அட்டைப்படக் கதாநாயகியாய்
விஸ்தரித்த காலத்திலிருந்து
நேற்றைய ஞாயிறு வரை
ஜனித்து பிரிந்த ஓர் உறவைப் பற்றிய
என் விரலின் நுனி வாசம் இது !
 
வசந்தன் -
பெயருக்கேற்ற பிறப்பு.
சின்னஞ்சிறு வயதில்
தந்தையெனும் உலகைப் பிரிந்து
தாயேனும் தெய்வத்தின் கருணையில்
தன்னுயிரைத் தனதாக்கிக் கொண்ட
தவறாத பிள்ளை அவன்.
 
எலிமெண்ட்ரி ஸ்கூலின் வாசலில்
விற்ற வாசனையில்லாத குச்சி ஐஸ்க்ரீமைச்
சுவைத்து வளர்ந்த நாட்கள் முதலாய் எனக்குத் தெரிந்த வரையில்
தீயது எதனையும் தீண்டாத
வாசமானவன் என் வசந்தன்.
 
சென்ற ஞாயிறின் சுட்டப் பொழுதில்
செந்தீக்கொண்டு சுட்டெரிக்கப் படும்வரையில்
சுகந்தமான வாசமுடன் வேதாளை வயசைவிட்டு விவரமான வாழ்க்கைக்கு
விலாசத்தை விவரிக்க வேண்டி
வனிதா - வுடன் தன்னைச் சேர்த்துக்கொள்ள
நிச்சயிக்கப் படவேண்டியவனை
சுட்டதீச் சுனைக்கொண்டு
கரைத்துவிட்ட கதைசொல்ல
என் விரலின் நுணி வாசம்கொண்டு
என் மணவறையின் காயத்திற்கு
மருந்து போடா முயன்றுகொண்டிருக்கிறேன் நான்...!

 
நல்லமனம் படைத்த நல்நண்பா!
நீ எங்கிருந்தாலும் உனைனியா ஒருபொழுதும்
என்வசம் இல்லை!

No comments:

Post a Comment