Wednesday, February 2, 2011

நான் எனக்குள்ளாக ரசித்த பொழுதுகள்...


அது ஒரு அழகான அந்திப் பொழுது...!

ஆதவன் சுட்ட வடு
மறையும் முன்பாக
என் அன்னைக்கட்டிய தூளியின் ஆதாரத்தை
அக்கினிக்கு அள்ளித்தந்த அவதிப் பொழுது...!

என் அருமை அன்பான தந்தை
எள்ளின் சுவையை சுவைக்கவேண்டி
எருமை வேந்தனுக்கு இரையான
எல்லையில்லாச் சோகப் பொழுது...!

கட்டிளம் காளையாய்
களத்தில் களியாட்டம் ஆடிய என்னை
காரிருள் விதி கண்மளங்கக்
கட்டிவைத்து கும்மாளமிட்ட கடைசீப் பொழுது...!

அழகு அண்ணனின் கரம்பற்றி
அன்னையை என் நெஞ்சிருத்தி
அடுத்தேன்னச் செயியப் புரியாது கலங்கிய
அச்சம் தலைகொண்ட அறியாத பொழுது...!

சுற்றி பல பெரிருந்தும்...
சுற்றம் பல பேசியிருந்தும்...
சிற்றம்பலவாசன் சிநேகம் மட்டுமே
சின்ன நெஞ்சில் சிறைகொண்டதால்...
சுழலதும் வாழ்க்கைச் சுழல் தட்டு என
சுழற்றிய சட்டையை தூர எறிந்துவிட்டுத்
தொடங்கியது என் சுமையான சுதந்திர வாழ்வு!

வயிற்ருக்குக் கஞ்சியா...
தொப்புளுக்குக் கஞ்சியா என
புரியாத நாட்களில் கூட
கோப்பைக் கஞ்சிக்கும் வழியின்றி
வாசலில் தோன்றிய வஞ்சப்புகழ்ச்சிக்கு
வர்ணஜாலம் காட்டி வந்த வறுமைப் பொழுது...!

கண்டேன் சீதையை என
அனுமன் சொன்ன ராமனைப்
போலல்ல என் பொழுது -
கண்டுகொண்டேன் சீதையை என
ராமன் சொன்னதார்போன்றதொரு
விசித்திரமான பொழுது அந்தப் பொழுது...!

விட்டில் பூச்சிக்கு
விளக்குக் கிடைத்த
சந்தோஷத்தை விடவும் கூட
ஒரு பங்கு அதிகம் தான் -
ஆம் -
பெற்றெடுத்தாள் என் பத்தினி
பிரதீபா என்றொரு பேழையை எனக்காக!

பொழுது புலர்ந்ததாம்...
கூடவே அடைமழை சிலிர்த்ததாம்...
புலர்ந்த பொழுதினைப் பார்த்து
பிடிமனளுக்கும் கூட பிணக்கு வந்ததாம்
என்பதைப் போல
புதிய உறவு என் வீட்டினுள் புகுந்த பொழுது
வீட்டினுள் நின்ற நான்
வழுக்கியபடி வந்து
வீதியில் நின்ற வேண்டாதப் பொழுது...!

காடு...மலை...கரடுமுரடான பாதைகள்...
கண்ட இடமெல்லாம்
கல்லுக்கும் முள்ளுக்கும் கைகலப்பு -
என்னை யார் முதலில் குத்துவதென்று...!

வலிக்கும் வேதனைக்கும் இடையிலே
சில நேரங்களில் சுகமான சுமைகள்...

நிலைபுரியாத மனத்தோடும்
விடை தெரியாத வாழ்க்கைக் கேள்விகளும்
நிறம், தரம், நிரந்தரமாகாத நிலையிலும் தான்
என்னவன் முன்பாக எந்தன்
காரியக் கிரஹபிரவேசம்...!

முத்துமுத்தான குருமீசையும்
முன்பக்கம் அதிகம் சிதரவிடப்பட்ட கேசமும்
தீர்க்கமானப் பார்வையும்
தெளிந்த தெளிவானப் பேச்சும்...
உயரமானவனாய்... மனத்தில் மிகவும் உயரமானவனாய்
என் மனத்தில் உணர்த்திய உன்னதமானப் பொழுது...!

கழுத்துப் பட்டைக்கும் எனக்குமாக
தொடர்ந்துவந்த பந்தம் கூட
முறிந்து போன பொழுதும் அதுதான்!

எழுதி எழுதி மரத்துப் போன
என் விரல்களுக்கு இன்னமும்
தணியாத தாகம்!
என்
விரல் நுணி பேனா மைக்கும் கூட!

அன்பான அவனது சிநேகம்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்...
இடையில் கடந்து வந்த
மரத்தும், மறக்கமுடியாதக் காயப் பொழுதுகள்...!

அத்தனையையும் மீறியும்
நானுமரியாமல் வளர்ந்துவந்த
என்
வாழ்க்கைப் பொழுதுகள்...!

கடந்துவந்தக் காலப் பொழுதுகளில்
கரம் கொடுத்து நடத்திவந்த
கண்ணிய புருஷனின் தரிசனம் மட்டுமே
என்னுள் இன்னமும்
இனம்புரியாத சுகமான உணர்வுகளை
இறுக்கி பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது!

எத்தனையோ முறை
என்னவன் முன்பாக எதிர்நின்று
எத்தனைப் பேச நினைத்தாலும்
அவனது காந்தக் கண்கள் தவழவிடும்
குளிர்ந்ததொறுப் பார்வை போதுமே...
என் சுவாசத்தைப் பிசைந்துவிட்டு
என் அன்னைத் தந்த கொரோசனைக்கு
வேலையின்றிச் செய்துவிட்டு
வெறும் காற்றுகூடத்
தொண்டைக்குள்ளிருந்து வெளிவர மறுக்கும்
சுகமான சுமைப் பொழுது...!

இடையிடையே சில சொந்தங்கள்
காலனின் கயிற்ருக்கு இரையாகிப் போய்...
அந்தச் சொந்தங்கள் சேர்த்துத்தந்த
சுமைகளில் ஒன்றிரண்டு கூட செல்லரித்துப் போய்...

என் நெஞ்சமெனும் தூளியிலே
துயில்கொண்டு கூடி நின்ற
சுகமானச் சொந்தங்களில் சில
விட்டுச் சென்ற வாசம் மட்டுமே
என்னுள் இன்னமும் காயாமல்...

தம்பியுடையான் படைக்கஞ்சான்
என்று சொல்லிவிட்டு
அடுத்த நாள் சூரியனுக்குக் கூடச் சொல்லாமல்
அயர்ந்தத் தூக்கத்தில்
அடங்கிப் போனான் என் அண்ணன்!

பெற்றவளுக்கு என்னை மணமுடித்து...
பெற்றவளைப் போல் எனை வளர்த்து...
நான் பெற்றவளை பேணி நின்ற
பெருமனத்தால் - எந்தன்
மனமுகந்த மனைவியின் அன்னை...!

இப்படியாகப் பற்பலச் சொந்தங்கள்
விட்டுச் சென்ற வாசங்களுக்கிடையே
தன் சுமையை என்தோளில் இறக்கிவிட்டு
நான் தவிப்பதைக் கூடத்
தரம் பார்த்து விடைகேட்கும்
செல்லரித்துப் போனச் சொந்த மனிதர்களை
இனம் காட்டிய இருக்கமானப் பொழுதுகள்...!

இவைமட்டும் போதாதென்று
நினைத்தானோ என் நல்லுள்ளம்கொண்ட இறைவன்...?

துன்பப்பட்டது போதாதென்று
தயங்காத் தாய்மையாம்  
என் அன்னையைகூட
எனைவிட்டு காலனின் கயிற்றுக்கு முடிபோட்டு
முற்றிப் புள்ளி வைத்துவிட்டான்...!

நானுரங்கத் தாலாட்டு பைடியவள்
மீலாத் துயிலில் மரத்துபோக
அவன்தாள் பணியச் செய்துவிட்டான்...!

சொந்தமேங்கே... பந்தமேங்கே...
ஒண்டிக்கொண்ட கூடும் போனதுமேங்கே...
வீதி மட்டுமே சொந்தமானதே...
காடு வழி போன தூரமேங்கே...

கடவுளுக்குத் தான்
எத்தனைக் கண்கள்...
ஒவ்வொரு கல்லாக வீசியவன்...
இன்று ஒரே நேரத்தில்
பற்பல கற்களை வீசிவிட்டு
கண்சிமிட்டக் கூட நேரமின்றி
காணாது கான்கிரானே...!
கலத்தில் எனைமட்டும் தனியாக நிறுத்திவிட்டு!

இருந்தும் கூட
எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்...!

என் அன்புத் தோழா!
விரல் நுணி வாசத்துச் சொந்தக்காரா!

இறைவன் எழுதிய கவிதை
மனிதன் வாழும் வாழ்க்கை,
வாழ்வின் இலக்கணங்களை மட்டுமே
அவன் எழுதியனுப்புகிறான்
இலக்குகளை நாம் தான்
தேடிக்கொள்கிறோம்...தேடிக்கொண்டிருக்கிறோம்...
நாம் தேடிக்கொள்ளும் இலக்கு
இனிப்புச் சுவைச் சொட்டும்
தேனாக இருக்கட்டும்...
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்கவேண்டாம்!

எங்கேயோ இருந்துகொண்டு
எனை வாட்டும்
என் பெருமதிப்புக்குரிய இறைவா...!
நின்று சொல்வேன் நான்!
கேள்!
என்னோடு நீயும் நிற்கின்றாய்...
மறவாதே!

நெற்றியின் வியர்வையை
நிலத்தினில் விதைக்க
நெல்மணி உண்டாகும்!
ஆயினும் -
அதைப் பற்றியத் தாள்களின்
முற்றிய விரல்களில் தான்
பாரதம் பொன்னாகும்!

நீ தரும் பாரம்கொண்டு
எனைத் தீண்டினாலும் கூட
நெஞ்சார நிமிர்ந்து நின்று
நான் சொல்வேன் என் அன்பு இறைவா!

விளக்கித் தீண்டவே
நால்போழுதை வீணடிக்கும்
விட்டில் பூச்சியல்ல நான்!

நெடுநாளாய்
சிற்பியின் சிதைப்புக்கு
இடம் தந்தாலும்
இறுதியில்
பிறர் போற்றி பண்பாடும்
இறைச்சிலையா மாறும்
நிறை கல் நான்!



1 comment:

  1. Suresh

    Just Beautiful.. beautiful..beautiful.. keep writing more stuffs .. love it ..

    best regards
    G.Sridhar

    ReplyDelete